காதல் சூறாவளி

காதல் புயலடித்து என் கட்டுமரம்(மனம்) கவிழ்ந்ததடி,
உன் பார்வை சூறாவளியில் என்
(வாழ்வு)மரம் வேரோடு சாய்ந்ததடி,
நீ வீசிய பாச வலையில் என் நேசமது
சிக்கி தவிக்குதடி,
ஆழ்கடலாய் இருந்த என் மனதில்
பூகம்பம் வந்து சுனாமி பொங்குதடி,
ஆர்ப்பரிக்கும் அலையாய் அலைகின்றேன், நீ வந்து கால் நனைத்திடடி,அன்பு தேடும் சேயாய்
காத்திருப்பேன், அரவணைக்கும் தாயாக சடுதியில் வந்திடடி,●

எழுதியவர் : பாலமுருகன் பாபு (25-Apr-18, 5:25 am)
Tanglish : kaadhal sooravali
பார்வை : 98

மேலே