பணம் படுத்தும் பாடு

பணம் என்றால் பல் இழிக்கும்
பாதாள உலகத்தில்

பணம்தேடி அலைகின்ற
பாவிகளாய் நாம் இங்கே.

ஆடிக் காற்றில் பறக்கின்ற
அம்மியைப் போல் நம்வாழ்க்கை

பணம் தேடும் பயணத்தில்
பலவாராய் அலைகின்றோம் .

அயல்நாட்டில் பிழைப்புக்காய்
அயராது உழைக்கின்றோம்

அம்மாவின் தாய்ப்பாசம்
கிடைக்காமல் தவிக்கின்றோம் .

நோய் நொடியும் வந்துவிட்டால்
குடும்பமே இங்கு கூடி நிற்க

கவனிப்பார் இல்லாமல்
அங்கோ நாம் தனியாக .

பணம் தேடி சென்றுகொண்டு
பாசத்தை தொலைத்துவிட்டோம்

பாசம் மட்டும் போதுமென்றால்
வாழ்க்கை இங்கே வாழ இல்லை .

அப்பாவின் அன்பின்றி
அம்மாவின் அரவணைப்பின்றி

அண்ணாவின் அதட்டலின்றி
தம்பியுடன் செல்ல சண்டையின்றி

ஆதரவு இல்லாத அங்கே
அனாதையாய் நம் வாழ்க்கை .

பணம் படுத்தும் பாட்டில் நல்ல
பாசத்தை இழந்துவிட்டோம் .

புரிந்துகொண்டு வாழ்ந்தாலும்
புரியாத வாழ்க்கை இதில் ,

பணமின்றி வாழ்வதென்பதும்
பலனில்லா வாழ்க்கையன்றோ ...........

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா.... (10-Aug-11, 2:20 pm)
பார்வை : 609

மேலே