காணாமல் போயிருந்தால்
படுத்தவுடன் உறக்கம் கொடுக்கும்
என் கட்டில் மெத்தை இன்று
எனக்கு முன் உறங்கிப் போனது
தலை சாய்க்கும் தலையணை மேல் இன்று ஏனோ என் மனம்
சாய்ந்து கொண்டது
கனவுகள் களமிறங்க வேண்டிய
கண்களை இன்று
காதல் ஆக்கிரமித்துக் கொண்டது
இப்படியெல்லாம் நிகழ
வாய்ப்பே இல்லை நேற்று மட்டும்
உன்னை காணாமல் போயிருந்தால்.....!