நிலைக்கும் என்றே

வாழ்வு" நிலைக்கும் என்றே" நம்பியிருப்போம் ||

நாம் மூச்சுவிட வரும் காற்றில் ||

இடையிடையே ஏதோ இடையூறின் ||

காரணத்தாலோ  வந்த இச்சிறுச்சிறு ||

மூச்சுத் திணரல்களதனைத்
தாங்கிடுவோம்  ||

வாழ்வு புகட்டவிருக்கும் பாடமதை ||

ஏற்றிட வில்லை யெனில்
நாம் மனிதரில்லை ||

இன்றில்லை யென்றா லென்னவாம் ||

நாளை நமதாகலாம் என்ற
நம்பிக்கை ||

இழக்கவில்லை வாழ்வு" நிலைக்கும் என்றே" ||

நன்மையென ஆரம்பித்து
தீமையிலும் ||

தீமையென ஆரம்பித்து
நன்மையிலும் ||

முடிவதுண்டு இரண்டிற்கும் நன்றி என்போம் ||

வாழ்வு" நிலைக்கும் என்றே" நம்பியிருப்போம் ||

பசுமைக்கு பால்வார்க்கும்
வானம் காய்ந்தென்ன ||

உழவர்க்கு பால்வார்க்கும்
பசுமை தோய்ந்தென்ன ||

காய்ந்தாலும் தோய்ந்தாலும்
மாயாது ஒருநாளும் ||

பசுமை" நிலைக்கும் என்றே" நம்பியிருப்போம் ||

•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"நிலைக்கும் என்றே"
கவிதைமணியில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (2-May-18, 2:13 pm)
பார்வை : 102

மேலே