ஏன் இத்தனை அழகை படைத்துவிட்டாய்
ஏன் இத்தனை அழகை படைத்துவிட்டாய்!
மலை
அதனை உரசும் மேகங்கள்
மழை
அது தரும் மண்வாசனை
நதி
அதன் மீது மிதக்கும் தாவரங்கள்
மனிதன்
அவன் அனுபவிக்கும் உணர்வுகள்
விலங்குகள்
அவை மனிதர்களோடு பழகும் விதம் ,
இதையெல்லாம் அனுபவிக்கவிடாமல்
பசி
வேலை
துக்கம் என
ஏன் இத்தனை தடைகளை படைத்துவிட்டாய்?