அவள் தரிசனம் மீண்டும் கிடைப்பது எப்போது
உன்னழகைப் பருகிப் பருகி
மலரின் மதுவை உண்ட வண்டுபோல்
மயங்கிபோனேன்,மயக்கம் தெளிந்தபின்
பார்க்கையிலே நீ அங்கு இல்லை
உனக்கொரு வடிவம் தந்திட
மனம் எண்ணியபோது நீ அங்கு இல்லை
நீ கற்பனைக்கும் எட்டாத அற்புதமல்லவா ?
உன்னை மனத்திலும் இருத்திட இயலவில்லை,
மீண்டும் உன்னை நேரில் பார்த்தாலன்றி
உன் உருவம் மெய்மையாகாது என்
கண்கள் முன்னே, வாராய் பெண்ணே
உன் பேரழகின் அடிமை நான்
உன்னழகின் தரிசனம் எனக்கு
இனி கிடைப்பதெப்போது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
