ஒரு கவிதை ஒரு மரணம்

எழுதப்பட்ட அக்கவிதை
விடப்பட்ட தாளிலிருந்து
கரையலானது மனதில்
காண்பவர் கண்களிலிருந்து.
வருவோர் போவோரெல்லாம்
வாசித்தும் மறந்தும்
நகர்ந்து பாய்ந்தனர்
அவரவர் பொழுதுபோக்கில்.
தப்பி விழுந்த புறாகுஞ்சாய்
மனங்களை தேடி அலைந்தது
குரல்களை அனுப்பி அனுப்பி.
அர்த்தங்களை ஏவியே
பழகிப்போன மனம்
ஆளற்ற பாழில் மௌனமாக
பாவிசைத்து அலைய
சபித்த கவிதைகள்
மரித்தது காகிதத்தில்...
இன்னொரு கவிதை
இன்னொரு நாளில்
இன்னொரு மனதில்
இன்னொரு...

எழுதியவர் : ஸ்பரிசன் (9-May-18, 7:29 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 93

மேலே