அட மூளை இல்லா மூட்டைப்பூச்சியே
"ஆஹா! அழகிய வானம்!
என்ன அதிசயம் இது!
ஜில்லென்று வெயிலடிக்கிறதே!"
" அட மூளை இல்லா மூட்டைப்பூச்சியே! தார்சாலையில் காலை வைக்க முடியாத அளவுக்கு கொதிக்கிறது!
உனக்கு ஜில்லென்று வெயிலடிக்கிறதா!? "
" டேய்! யார பார்த்துடா சொன்ன? "
" நான் இந்த மூட்டைப்பூச்சியைப் பார்த்து சொன்னேன் பா. "
" டேய்! உனக்கு தான்டா அறிவில்லை! மூட்டைப்பூச்சி எங்கையாவது பேசுமா? "
" அட போமா! பேசாமலா சொல்லுவேன். இந்தா என் கையில இருக்கு பாரு. இது தான் மா பேசுனது. "
" அப்படி என்ன பேசுனதுனு சொல்லுங்களேன் "
" அதுவா.....
ஆஹா! அழகிய வானம்!
என்ன அதிசயம் இது!
ஜில்லென்று வெயிலடிக்கிறதே! என்று சொன்னது ".
" அடேய்! அது நான் சொன்ன கவிதை டா. உன்ன என்ன பண்றேனு பாரு. "
" ஐயையோ! பத்ரகாளி ஓடிவருதே.
ஓடு டா சீக்கிரம்.
எமன் கிட்ட இருந்து கூட தப்பிச்சிடலாம் போல,
இந்த உமன் எமனைவிட வேகமா துரத்துதே. "