அட மூளை இல்லா மூட்டைப்பூச்சியே

"ஆஹா! அழகிய வானம்!
என்ன அதிசயம் இது!
ஜில்லென்று வெயிலடிக்கிறதே!"

" அட மூளை இல்லா மூட்டைப்பூச்சியே! தார்சாலையில் காலை வைக்க முடியாத அளவுக்கு கொதிக்கிறது!
உனக்கு ஜில்லென்று வெயிலடிக்கிறதா!? "

" டேய்! யார பார்த்துடா சொன்ன? "

" நான் இந்த மூட்டைப்பூச்சியைப் பார்த்து சொன்னேன் பா. "

" டேய்! உனக்கு தான்டா அறிவில்லை! மூட்டைப்பூச்சி எங்கையாவது பேசுமா? "

" அட போமா! பேசாமலா சொல்லுவேன். இந்தா என் கையில இருக்கு பாரு. இது தான் மா பேசுனது. "

" அப்படி என்ன பேசுனதுனு சொல்லுங்களேன் "

" அதுவா.....
ஆஹா! அழகிய வானம்!
என்ன அதிசயம் இது!
ஜில்லென்று வெயிலடிக்கிறதே! என்று சொன்னது ".

" அடேய்! அது நான் சொன்ன கவிதை டா. உன்ன என்ன பண்றேனு பாரு. "

" ஐயையோ! பத்ரகாளி ஓடிவருதே.
ஓடு டா சீக்கிரம்.
எமன் கிட்ட இருந்து கூட தப்பிச்சிடலாம் போல,
இந்த உமன் எமனைவிட வேகமா துரத்துதே. "

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-May-18, 11:12 am)
பார்வை : 276

மேலே