மயிலிறகை விட மென்மையானது

பெண்ணே !!

நெற்றிச்சுட்டிக்கு பல நிமிடங்களாக
சிந்தனை !

புருவமைக்கு ஒரு
Google Search .

மூக்குத்தி எடுக்க
மூன்று நாழிகை யோசிக்கிறாய் !

கழுத்து மணிக்கு பல
கணங்கள் கழிக்கிறாய் !

ஒட்டியாணம் எடுக்க
ஒன்னே கால் மணிநேரம் !!

வளையல்கள் எடுத்தே
வயதில் பாதி கரைத்துவிட்டாய் !!!

கால் கொலுசுக்கு
கால்மணி நேரம் !!

ஒரு மோதிரத்துக்கு கூட
ஓராயிரம் யோசனைகள்!!

உன் உணர்வுகளை சொல்லாமலேயே
உணர்ந்தும்
உயிருக்கு உயிராக
வாழ்க்கை முழுதும்
வாழப்போகும் துணைவனை
ஒரு நொடி கூட முழுதும் யோசிக்காமல்
காதல் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கிறாயே ?

தேர்ந்தெடுத்ததை விட துரிதமாகவே தூக்கியும் எறிகிறாயே ?

நியாயமோ ????

ஒரு வேளை


ஆண்களின் இதயம்
இரும்பென்று நினைத்தாயோ ...?

இல்லையம்மா...

அது
மயிலிறகை விட மென்மையானது .

எழுதியவர் : ஹும்ஸ் (29-May-18, 10:45 am)
பார்வை : 919

மேலே