வேதாந்திகளை நான் நம்புவதில்லை

எனது பசியை என்னால் துறக்க முடியவில்லை.
எனது வாய் கண்ட ருசியை என்னால் மறக்க முடியவில்லை.
எனது உடலை விட்டு ஓட முடியவில்லை.
எல்லாம் மாயை என்றால் இம்மாயைகள் என்னை விட்டு நீங்காது தொடர்வதென்ன?
வேதாந்தம் பேசலாம்.
உள்ளத்தில் கொண்ட துன்பத்தையே துறக்காத நீங்கள் வேதாந்தம் பேசுவது தான் மிகப்பெரிய மாயை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-May-18, 12:13 pm)
பார்வை : 789

மேலே