காதல்

ஒரே வரியில், என்னவளே
'நீ பேரழகி' என்றேன்
நீ அதை ஏற்று என்னையும்
ஏற்றாய் உன்னவனாய்,
பரிசாக எனக்கு தந்தாய்,
முத்துக்கள், முத்து முத்தாய்,
' கண்ணே,உனக்கு உன் கண்களின்
அழகைக் கொண்டே கவிஞன் நான்
காவியம் பாடினால் நீ எனக்கு
என்ன பரிசளிப்பாய்' என்றேன் ......இப்போது,
கனவுலகில் நான், ......அதில் நீ
சொல்கிறாய் .....'நீ அங்கேயே
அதே உலகில், கனவுலகில்
இருந்துவிடு' சட்டென்று
கனவு கலைந்தது ......இப்போது
இன்னும் அவள் என் கைகளில் ,
இந்த உறவொன்றே போதுமடி
என்றேன்,........ என் கனவு
அவளுக்கு தெரியாது......நான்
இப்போது சொன்னது அவளுக்கு
புரியவில்லை.....பிடி தளர்ந்தது
அவள் பிரிந்தாள்.................
'நுணலும் வாயால் கெடும்'என்பார்
இதனாலோ.......
என்னை நான் நொந்து.....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jun-18, 3:51 pm)
Tanglish : kaadhal
பார்வை : 102

மேலே