காதல்

என்னருகில் நீ இருந்தபோது
நேரத்தை பிடித்து வைக்க
முடியலையே என்றிருந்தது
நீ இல்லா இந்த வேளையில்
நேரமே இன்னும் சீக்கிரம்
போய்விட முடியாதா உன்னால்
என்று எண்ணத்தோன்றுகிறதடி
என்னருகில் நீ இருந்தாய்
உலகத்தின் மேல் நான்
என்பதுபோல் இருந்துதடி-நீ
இல்லா இந்த வேளையில்
பாதாளத்தில் அல்லவோ
வீழ்ந்துவிட்டேன் நான் -தேவதையாய்
பறந்துவா என் பைங்கிளியே-உந்தன்
சிறகினிலே என்னை ஏற்றுக்கொள்
உலகின் கூரைமேல் கொண்டுசெல்லடி
அங்கிருந்து உலகைக்கண்டு மகிழ்வோம்
இருவரும் காலத்தை மறந்து என்றும்
இறவா காதலராய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jun-18, 11:49 am)
Tanglish : kaadhal
பார்வை : 191

மேலே