காதலனே

கன்னனாக வந்து என் மனதை பறித்துவிட்டாய்
அசத்தும் பேச்சியினால் என்னை அடியோடு சாய்த்துவிட்டாய்
அன்பு செலுத்துவதில் என் அன்னையை மிஞ்சிவிட்டாய்
விரும்பியதையெல்லாம் வாங்கித்தருவதில் என் தந்தையை தாண்டிவிட்டாய்
பாசமாக பார்த்துக்கொள்வதில் என் பாதுகாவலனாய் மாறிவிட்டாய்
எனக்கென பிறந்தவன் நீதானோ - அதனால்தான்
என்னை தேடி வந்தாயோ
உலகமே எதிர்த்தாலும் உன்னைத்தான் காதலிப்பேனே
சாதி மத பேதமெல்லாம் நம் காதலுக்கு கிடையாதே
மணமக்களாய் நாம் மாறும் நாளை எண்ணி காத்திருப்பேனே
மணமக்களாய் நாம் மாறாமல் மனிதர்கள் தடுத்தாலும்
கல்லறையிலும் உன்னை கட்டியணைத்துத்தான் தூங்குவேனே
இங்கு நம்மை துரத்தியடிக்க ஒருவரும் இல்லையே
என் காதலனே நாம் கல்லறையிலாவது
கனிவுடன் காதல் செய்வோமே !!!

எழுதியவர் : M Chermalatha (8-Jun-18, 4:29 pm)
Tanglish : kathalane
பார்வை : 140

மேலே