பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எதார்த்தமாய் சந்தித்த உறவொன்று..,
என் உறவாய் மலர..,
புதிதாய் இறகு முளைத்த பறவையாய் என் மனம்...!
அனுபவ நினைவுகளில் நனைந்த உன் நினைவுக்குறிப்புகளில்
என்னோடும் சில துளிகளை பகிர..,
உன் குழந்தை மனதை வாசித்தேன் ஒரு வாசகியாய்..!
என் அன்றாட நாட்களும்..,
உன் உரையாடல்களில் பாடல்களன்றி நகர மறுக்கும் ..!
பாசமாய் நீ அழைக்கும் கணங்கள்..,
நினைவுறுத்தும் சகோதர அன்பை..!
ஒவ்வொரு நாட்களும் உன் ஆடை நிறத்தை மறக்காமல் கவனிப்பேன்..,
உன் கடலை மிட்டாய்க்காக அல்ல..,
"ஐயோ மாட்டிக்கிட்டேனே" என்பதை கேட்பதற்காகவே..!
ஒவ்வொரு முறை நீ உறவுமுறையில் அழைக்கையில்..,
சகோதரனற்ற எண்ணங்கள் தொலைந்தது..!
உன்னை எழுதிட வரிகளின் நீளமும் போதவில்லை..,
எழுத்துக்களும் ஒன்றோடொன்று சண்டை பிடித்துக் கொண்டது..!
உனக்காய் எழுதப்பட்ட என் கவிதைத் தாள்கள் சிறகுமுளைத்து ஏழு வர்ண வண்ணத்துப் பூச்சிகளாய் அணிவகுத்து..,
வானில் உலவுகிறது... உன்னைச் சென்றடைந்து வாழ்த்த..!
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா.."
உன் வளமான,நலமான வாழ்வுக்கான பிரார்த்தனைகளுடன்.., உன் சகோதரியின்
வாழ்த்துக்களும்..!

எழுதியவர் : சரண்யா (9-Jun-18, 6:50 am)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 275

மேலே