மாறியது உன் மனம் வாடியது என் மனம்

நீ
இல்லாமல்
நிழலில்லை
உருவம் எதுவும்
எனக்கில்லை

விளையாட்டாக
நீ சொன்ன
வார்த்தை
என் வாழ்க்கையை
விடை
தெரியாத
வினாவாக
மாற்றிவிட்டது

நானும்
மனிதன் தான்
மனம்
என்ற ஒன்று
எனக்கும்
இருந்ததால்தான்
உன்னை
காதலித்தேன்

என் இதயக்
கூட்டில்
ஒரு
கருவறையில்
நம் காதல்
குழந்தை
வளர்ந்தது
கல்லிப்பாலை
போல்
உன் வார்த்தை
அதை
கலைத்துவிட்டது
இறந்தது
காதல்
குழந்தை
மட்டுமல்ல
அது குடியிருந்த
நானும் தான்
உயிர் இருந்தும்
இறந்துவிட்டேன்
உன்னாலே..........

கரணம் எதுவும்
உனக்கு
தெரியவில்லை
என்னை
விட்டுச் செல்ல
என்னையே
காரணமாய்
வைத்துக்
கொண்டாய்
நீ செல்ல....

மலரில்
இருக்கும்
மனம் போல தான்
என் காதல்
மலர்ந்த உடன்
மனம்
மறைந்துவிட்டது
மறைத்து
என் காதல்
வாடியது
நான்.......
தேனை போல
எனக்குள்
இருந்த
காதலை
கொண்டு சென்ற
தேனீ நீ........

நான்
தொலைத்துவிட்ட
பொருள்
அல்லடி நீ..
என்னை விட்டு
தொலைந்துவிட்ட
பொருள் நீ....
தொலைத்திருந்தால்
என்னை நீயே
தேடி
வந்திருப்பாய்........
தொலைத்தால் தான்
நானே
தேடி வந்தும்
என்னை தேவை
இல்லை
என்கிறாய்...........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 8:42 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 87

மேலே