வெடித்தும் துடிக்கிறேன்
புரியாத பொண்ணு இவ
என்ன புரிஞ்சிக்காம போற புள்ள !!
தெரிஞ்சே த மறந்திய
நான் தேட தேட கண்ண கட்டி மறைஞ்சிய !!
புரியாம போறவளே
காரணம்தா நீ சொன்னியே,,,
புது மன பெண்ணே
உன் வருங்கால புருஷனுடன் என்னை அழைக்க வந்தியோ !!
நீ கை கோர்த்து இணைந்து நிற்கும் மேடையிலே
இளித்துக் கொண்டு மலர் கொத்துடன் வந்து நிற்க நினைத்தாயோ !!
வாடிய மலர் போல் என்னை தூக்கி எறிந்தவளே
நீ மேடையேறும் முன்
என் பாடைக்கு வந்து
உன் ஒரு துளி கண்ணீர் பரிசளித்து விட்டு போ !!
என் வெடித்த இதயம் நிம்மதியாக மண்ணுக்குள்ளே புதைப்படும் உன்னை நினைத்துக் கொண்டே ........
படைப்பு
ரவி.சு