ஈகை

நிலவின் ஒளிபோல்
எண்ணிலடங்கா
இன்பத்தை இதழில்
கொண்டு,
ஈகை குணத்தை
இதயத்தில் திறந்து,
ஏக்கமே உணவாக
இருந்த வறிய
உள்ளங்களுக்கு
அள்ளிக் கொடுத்த
கொடுக்கும்,
உடன்பிறவா சகோதர
சகோதரிகளுக்கு,
இனிய ஈகைத் திருநாள்
வாழ்த்துக்கள்🌙
மகிழ்ச்சி மழையென
பொழியட்டும்🌦️