ஏமாற மறுத்தேன்
நயவஞ்சக பேச்சுகளுக்கு நழுவி ஓடினேன்...
இரட்டை அர்த்தங்களை புரிந்து விலகினேன்...
முகத்தையும் முகமூடியையும் பகுத்தறிந்தேன்...
வாக்குறுதிகளை எல்லாம் ஏற்க மறுத்தேன்...
வரம்பு மீறின புகழ்ச்சிகளை மறக்கப் பழகினேன்...
ஏதார்த்தத்திற்கு அர்த்தம் கற்றுக் கொண்டேன்...