வழித்துணையாக வாராயோ வெண்ணிலவே

வழித்துணையாக வாராயோ வெண்ணிலவே .
வாழ்வின் கனவுகள் எப்பொழுது நனவாகும் .
வாழ்வதனின் மொழி புரியாமல்
வார்த்தைகள் கூட மௌனமாகி போகிறதே

பகல்தன்னில் வருவாய்
பாசம் வைப்பாய் என
பாவை போல காத்திருக்க

மாயையில் வாழ விருப்பம்கொண்டு
இரவின் இருளில் உறங்கி
இருட்டினிலே மயங்கி போகிறாய்

காலியான வாழ்வு தன்னில் .
காலங்கள் கருக்கொள்ள மறுத்தால் .
காய்ந்து போவது வாழ்வுதானே

கற்பனைகள் அலைமோதி
காதலில் இசைபாடி
காலமெல்லாம் இன்பமாக வாழ்ந்திடவே
வழித்துணையாக வாராயோ வெண்ணிலவே

எழுதியவர் : காலையடி அகிலன் (19-Jun-18, 9:55 pm)
பார்வை : 97

மேலே