காதல்

உழுது
நீர்பாய்ச்சி
பதப்படுத்தப்பட்ட
வயல் அது!
நாற்று
ஒன்றினை
நட்டுச் சென்றவள்
அதற்கு
உரமிட்டு
மருந்திட்டு
நீரிட்டு
காத்து
வளர்த்தாள்.
அதுவும்
கதிர் முற்றி
நின்றது.
அறுவடைக்கு
நட்டவளைத்
தேடினேன்
எங்கும்
காணவில்லை!
அழைத்து
வந்தவளோ
அறுத்து வீசினாள்
களத்தின்மீது
காய்ந்து கிடக்கிறது
அந்த
வைக்கோலைப் போல்
எனது காதலும்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (20-Jun-18, 12:51 am)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே