என் உயிர் தமிழ்

தளர்வில்லா தமிழேவா
தனியாத இன்பம்தா
நாவினிலே தேன்சுவைதா
நலந்தரநற் தமிழேவா
மலர்போல மணமேதா
மனதுக்குள் மகிழ்வைதா
கண்ணுக்குள் எளிமைதா
காலத்தில் புகழைத்தா
மண்மேலே மழையாய்வா
மறந்தமிழே மகிழ்ந்தேவா
புன்னகையில் தவழ்ந்தேவா
புலமைக்கு வளமை தா
என் நினைவில் கவிதைதா
எப்போதும் நீயேவா

.

எழுதியவர் : அருண் குமார் (24-Jun-18, 9:34 am)
பார்வை : 3831

மேலே