பயணங்கள்

தூரங்களில் மனம்
விசாலமடைகிறது .
புது மனிதர்கள் , புது உறவுகள்
தூர தேசத்து பயணம்
நீள்வது , அனுபவங்களோடு ..ஆயுளும்
நீள்வதாக உணர்கிறேன் .
புது உயிர்கள் செல்களை
புதுப்பிக்கின்றன,
தூர தேசத்து மொழிகள்
அர்த்தங்களை அதிகமாக்குகின்றன .
கண்களுக்கு புது காட்சிகள்
நீட்சியாய்.

கால்நடைகள் போல் நடக்கிறேன்
..அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் தடங்கல் பதித்து ,
மீன்கள் போல் நீருக்குள் நீந்தாவிட்டாலும்,
நீரின் மேலே பயணிக்கிறேன் கப்பல்கள் நீந்த .
பறவைகள் போல் பறக்கவிட்டாலும் ,
வான்வெளியில் பயணிக்கிறேன் விமானங்கள் பறக்க .

காடும், கடலும், மலையும் ,
நிலமும் , பாலைவனமும்
வான்வெளியும் கூட
மாறி மாறி கலந்து கடந்து செல்லும்
என் பயணங்களில்.


பயணங்கள் எண்ணங்களுக்கு எப்போதும் தீனி போட்டுக்கொண்டு ,
அவ்வப்பொழுது
அறுசுவைகளின்
புதுக்கலவைகள் நாக்கிற்கு .

புது வண்ணங்களிலும் ,வடிவங்களிலும்
மனிதர்கள் ,.எண்ணங்களிலும் கூட ,.

குளிரோ வெப்பமோ
உணர்ந்து உடுத்திக்கொள்ளும் உடல்
பிராணவாயு பொதுஎன்றாலும் ,
புது சுவாசத்தால் புத்துணர்வில்
நாசியும் , நுரையீரலும் .

கட்டிப்போட முடியாத
காலத்திற்கு ,
புது தேசத்து காலடிகள் சுவடுகள்
போட்டியாய் .

சுழற்சியில் சுனக்கமோ
சோர்வோ இல்லை பூமிக்கு ,
ஓய்வோ உறக்கமோ இல்லை
பூமித்தாய்க்கு ,
பூமியின் தொடர் பயணத்தின் மேலே என் சிறு பயணம்
ஓய்வுகளோடும் , உறக்கங்களோடும்
இடையில் தொடங்கி
இடையிலேயே முடிக்கிறேன் .
எண் பயணமுடிவில் இரண்டற கலக்குறேன் பூமியினோடே ,
என்னோடு சுழன்ற பூமி
என்னுடன் கலந்து சுழலும்,
புது உயிர்களை சுமந்து சுழலும் எப்பொழுதும் ,

எழுதியவர் : (25-Jun-18, 7:13 pm)
சேர்த்தது : சகி
Tanglish : payanangal
பார்வை : 73

மேலே