263 சான்று சொல்ல வேண்டிய இடம் தவிர்த்து குற்றம் கூறுதல் தகாது – புறங்கூறல் 5

வஞ்சி விருத்தம்

ஆட்சி யாமுல கரசன்முன்
சாட்சி சொல்சமை யத்தலான்
மாட்சி யோர்பிறர் மறுவினை
நீட்சி யாநிகழ்த் தார்களே. 5

– புறங்கூறல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உலகாளும் வேந்தன் முன் சான்று சொல்லும்போது மட்டும் பிறர் குற்றத்தை எடுத்துச் சொல்லும் மாண்புடைய பெரியோர்கள், பிறரின் குற்றமுடைய செயல்களை வேறு எவ்விடத்தும் எக்காலத்தும் எடுத்துச் சொல்ல மாட்டார்கள்” என்றும், வேறு இடங்களில் குற்றம் கூறுதல் தகாது என்றும் இப்பாடலாசிரியர் கூறுகிறார் .
.
ஆட்சி - ஆளுவது. மறு - குற்றம். நிகழ்த்தார் - சொல்லார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-18, 11:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

மேலே