நீ உறங்கு நான் விழித்திருந்து பார்க்கிறேன்

இது அதிகாலைப்பொழுது
மெலிதாய் இதழ் விரி
குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யக்கூடும்
விடியலில் அவிழ
காத்திருக்கும் அந்த
ரோஜா மொட்டு
அதற்கு முன்னமே
மலர்ந்துவிட்ட
உன் புன்னகையின் மேல்...
இமைகளை
விரித்துவிடாதே!
திரைக்குப்பின்
உருளட்டும்
உன் விழிப்பந்துகள்
நான் வந்து சேருவேன்
உன் கனவிலும்...
ஒற்றை படுக்கையில்
கட்டியணைத்து
உறங்கினாலும்
கனவுகளிலும்
மிச்சம் வைக்காமல்
வாழ்ந்து தீர்ப்போம்.
இன்னும்
மீதமிருக்கிறது இந்த இரவு.

எழுதியவர் : சுரேஷ் குமார் (1-Jul-18, 1:08 am)
பார்வை : 340

மேலே