தாத்தா-பேரன் உரையாடல் நீட் பரிக்ஷை குறித்து

தாத்தா , பேரன் உரையாடல் 'நீட்' தேர்வு உரித்து
------------------------------------------------------------------------------

தாத்தா : ஏண்டா சுந்தரம் , நீ அந்த பிளஸ் 2 பரிக்ஷயில
லட்டு மாதிரி 97 சதவிகிதம் புள்ளி எண் வாங்கியதை
பார்த்தேன்; ஆனால் இந்த மத்தியஅரசு 'நீட்' ல
மட்டும் எப்படி 29 சதவிகிதம் தான் எடுக்க
முடிஞ்சுது.....................

பேரன் சுந்தர் : அதுவா தாத்தா பிளஸ் 2 பரிக்ஷையில்
டுடோரியல் கிளாஸ் மாடல் தாள்கள்
ஒர்கவுட் ஆச்சு மார்க் எடுத்தேன்.............
'நீட்' மூளைக்கு ரொம்ப வேல குடுக்கற
மாதிரி கேள்விகள் தாத்தா , நான் அதுல
கம்மியா வேல செஞ்சேன் ............
கவுதுட்டேன் .................

தாத்தா : ஒத்துக்கிட்டயா ...........எதிலியும் நல்ல
உழைக்க கத்துக்கணும்.........உழைப்பால்
வரும் உயர்வு நிலைக்கும்......உன்னை
தூக்கிவைக்கும் சுந்தர்......கஷ்டமில்லாது
வாழ்க்கை இல்லை............

இன்னும் ஒருமுறை, நீட் எழுதி நல்ல
மதிப்பெண் எடுப்பதை விட்டுட்டு ........
அதற்கெதிரான தேவையில்லா கலாட்டா
வேண்டாம்டா.....புரிஞ்சுதா .........

பேரன் : புரிஞ்சிக்கிட்டேன் தாத்தா........இதோ இப்பவே
போறேன், 'நீட். கு தயார்படுத்திக்க எதிர்வீட்டு
இன்ஸ்டிடியூட் கு..............!!!!!!!!!!!!!!!

தாத்தா : பாவிப்பசங்க, அதுக்குள்ள நீட் கு ஒரு
'ஷார்ட்கட்டா .................
எப்பதான் இந்த 'கரண்டி ஊட்டுதல்'போகுமோ
அப்பத்தான் நம்ம நாட்டுல 'நியூட்டன்''
'ராமானுஜம்.' 'ஐன்ஸ்ட்டின்' கள், உருவாவார்கள்
புரிஞ்சிக்க....................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jul-18, 4:57 pm)
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

மேலே