வரிகளின் வலிகள்

கதைக்கத்தான் ஆசை
கதகதப்பாய் நாலு வரி
காரசாரமாய் ஏழுவரி
காதலனாய் பத்துவரி அதில்
கவிஞனாக இரு பத்துவரி -
என்று சொன்னேன்.. என்னவளிடம்.!

கேட்கத்தான் ஆசை..
சிலிர்ப்போடு நாலுவரி
சிட்டிகையாய் ஏழுவரி
சிக்கிமுக்கியாய் பத்துவரி அதில்
சிக்கியவளாய் இரு பத்துவரி
என்று சொன்னாள் என்னிடம்..!

பந்தலும் போட்டாச்சு..
பந்தியும் போட்டாச்சு..
ஊரும் சேர்ந்தாச்சு...
நாரும் பூவுமாய்
நானும் அவளுமாய்
மாலை மாத்தியாச்சு...

கணவன் மனைவியாகி..
நங்கூரக் காதலாகி...
நாலு மாசமாகி...
மனைவி கணவனாகி..!
மாலை மாறிப்போச்சு..

இப்போதும் நான்
கதைக்கத்தான் ஆசை.!
கேட்கத்தான் ஆளில்லை..!

கேட்பாயோ என்னவளே..!
இப்போது என்னிடம்..
ஒற்றை வரி..ஒற்றை வரி..!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (3-Jul-18, 8:35 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 99

மேலே