என் நண்பனின் காதலுக்கு ஓர் கவிதை அஞ்சலி ....!!!

இவ்வுலகை விட்டு பிரியா விடை கொடுத்த என் நண்பனின் காதல் கதையை கவிதையாய் இதோ ...உங்கள் பார்வைக்கு .....

அண்ண பறவை போல் அழகாய் காதலிச்சோம் ......
ஆலமரத்தடியிலும் ,,,
ஆற்றங்கரையிலும், அழகாய் பேசி சிரிச்சோம் .....
கரும்புக்காடு, கருவேலந்தோப்பு,என்று
பார்க்காமல் ..........,,,
புதிதாக சிறகு கிடைத்த பறவைகள் போல்
சுத்தி திரிஞ்சோம் .....!!!!!!
சுள்ளி கட்டு தூக்கி நீ வரும்போது ..,
உனக்கு தண்ணித்தாகம் எடுக்கையிலே ...,
ஆன வரி ஓடையில மணல் ஊற்று பறித்து ....,
உன் தாகம் தனிச்சேனே நினைவிருக்கா ........!!!!!!

எப்படியோ ..!!!!
உன் அம்மாவுக்கு தெரிந்து போயி
கல்யானபேச்செடுக்க...
உடனே ஓடி போயி
கருப்பு சாமி கோயில ,
என் உயிர் உனக்கு ,
உன் உயிர் எனக்கு ,தான்னு
சூடம் ஏத்தி சத்தியம் செஞ்சோமே !!!
நினைவிருக்கா ....!!!!

ஒரு நாள் ,,
நீ உன் அம்மா கூட ஊருக்கு போன
அங்க என்ன நடந்ததோ எனக்கு தெரியல?
மறு நாள் காலையில ,,,
உன் மாமனோடு மாலையும் கழுத்துமாய்
நீ வீதியிலே ஊர்வலம் வாதப்போ ..!!!!!
வானம் இரண்டாக கிழிக்கப் பட்டது ..,,
நம் காதல் பயணம் தடம் புரண்டது ..,
கடல் நீரெல்லாம் வற்றி ..
என் கண்ணில் கண்ணீராக கரைபுரண்டோடியது

அன்று காலை,,
உனக்கு கல்யாண ஊர்வலம்..!!!
அன்று மாலை ,,,,
எனக்கு கடைசி ஊர்வலம் ..!!!!
கதறி அழுதபடி நின்ற என் வீட்டார்க்கும்,,,
என் அருமை நண்பர்களுக்கும்
விடைகொடுத்தப்படி .....!!!!!!!
நான் சென்ற ஒரு வாரத்திலேயே .........!!!
நீயும் தீயில் எரிந்து உலகத்திற்கே ...!!!
விடைகொடுத்து என்னிடம் வந்து சேர்ந்தாயே ...!!!

இங்கு ஜெயித்தது ...,
உன் அம்மாவின் பிடிவாதமோ,கட்டாயமோ அல்ல
உண்மையிலேயே ஜெயித்தது....
நம்முடைய காதலும்
நாம் செய்த சத்தியம் மட்டுமே ....!!!
_______***********________********_______
*********** ********

எழுதியவர் : ஆசைதம்பி (15-Aug-11, 9:49 pm)
சேர்த்தது : Asai AK222
பார்வை : 733

மேலே