சொல்லாத என் காதலை சுமந்துகொண்டு வருகிறேன் 555
அழகே...
கல்லூரி நாட்களில் நீ
செல்லும் வழியெங்கும்...
நானும் உன்னை
தொடர்ந்து இருக்கிறேன்...
நீ தொட்டு செல்லும்
பூக்களையெல்லாம்...
நான் தழுவி
சென்று இருக்கிறேன்...
சிலநேரம் உன் எழுதுகோலை உன்
இதழ்களில் வைத்து...
சிந்தனையில் இருப்பாய்...
உன்னை
ரசித்தபடியே நானும்...
என் எழுதுகோலை இதழ்களில்
வைத்து கடித்தேவிடுவேன்...
உன் பூ
இதழ்களென நினைத்து...
நீ இல்லாத நேரங்களில் சில
நிமிடங்கள் உன் இருக்கையில் நான்...
ஆண்டுகள் சில கடந்து
பார்த்தேன் உன் புகைப்படம்...
என் வீட்டில்
என் தாயின் கையில்...
சொல்லாத என்காதலை
சுமந்துகொண்டு நான் வருகிறேன்...
நாளை உன்னை பெண்பார்க்க
என்னுயிரே.....