கலங்கரை விளக்கு கட்டுரை
கலங்கரை விளக்கு
திசையெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் கடலில்
திக்கு தெரியாமல் பரிதவிக்கும் மாலுமிகளுக்கும்
கப்பலில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் இது ஒரு அற்புத விளக்கு
புயலில் கொந்தளிக்கும் அலையில் , அலைக்கழிக்கப் படும் மனிதரை
தன் ஒளியின் வீச்சில் ஆசுவாசப் படுத்தி
அவரவர் இருக்கும் திசையை அறிந்து கொள்ள பக்கத் துணையென ஒளி கொடுத்து
வழிநடத்தும் வழிகாட்டியே கலங்கரை விளக்கு
கடலில் தத்தளிக்கும் ஒவ்வொருவருக்கும் பாரபட்சமின்றி
இவ்விளக்கின் ஒளி சென்றடைகிறது
இரவில் சந்திரன் இறைவனின் அற்புதம்
இரவில் கலங்கரை விளக்கு கடலின் நடுவே மனிதனின் அற்புதம்
கடலின் நடுவே பயணம் போனால்
உயிரைக் காப்பவர் யாரோ ,
மீண்டும் கரைக்கு வந்திடுவோமா / என்ற கேள்வி குறி நம்மை ஆட்டிப் படைக்கிறது ,
விடை தெரியா கலக்கத்தில் பாதி ஜீவன் கரைகிறது
ஏனோ ஒரு இனம் தெரியா தைரியம் கலங்கரை விளக்கை பார்த்ததும் மனதில் ,
எங்கு பார்த்தாலும் ஆழ்கடல்
எதை பார்க்கவும் எதை அனுபவிக்கவும் எதை ரசிக்கவும் முடியாதநிலை
உப்புத் தண்ணீரும் அதன் ஆழமுள்ள தோற்றமும் மட்டுமே கண்ணுக்குள்
இடையிடையே இக் கலங்கரை விளக்கின் ஒளி சொர்க்கம் போல் காட்சி தருகிறது
கனத்த இதயங்களை இலேசாக்கும் ஒப்பற்ற விளக்கு இது ,
கடலில் அல்லாடும் ஒவ்வொரு மனிதனின் வேதனைகளையும் அச்சத்தையும்
அன்றாடம் அகற்றும் கலங்கரை விளக்கு
கடலின் நடுவில் மனிதனுக்காக ,
கலங்கும் நெஞ்சங்களை கரையெங்கே அங்கே செல் என்று ஒளி கொண்டு வழி காட்டும்
ஒளியே/ உன்னை கடலின் தாய் என்று சொன்னால் மிகையாகாது
ஒளியே நின் ஒளி கண்டு பிழைக்கின்றோம்
ஒளியின் வழியில் மனிதன் கடலில் .