அவள் பார்வை
ஒலிஅலையாய் வருவது வேத மந்திரம்
இவள் கண்களின் அசைவில் வரும்
மௌன மந்திரம் ....ஒலி அலை இன்றி
ஓளி மட்டும் தருவது , பார்வையாய்.
அது விழுந்திடும் மனதைக் கட்ட
காதல் கயிற்றால்; கண்ணொளி
என்றிடலாமா இம்மந்திரத்தை
காதல் மந்திரம்