நாடகம் எனும் ஊடகம் - கவிஞர் புதுவைக் குமார்
நாடகக் கலைஞர்களின்
முதல்தாரம் மூலாதாரம்
முகத்தில் பூசும் அரிதாரம்
அதுதான் அவனை எடுக்கச்செய்கிறது அவதாரம்
மேடையில் மட்டும்
நடிப்பவர்கள்
வாழ்க்கையில் அல்ல
தமிழ் கண்ட சிக்கலை முட்களை
சொக்களை விக்கலை நக்கலை
கலைந்தது எக்கலை ?
இயல் இசை இணைந்த நாடகக்கலை
இதுவே கலைந்தது மனிதன் மனதில்
உள்ள கவலை எனும் கற்களை
இது முதல்வர்களை உருவாக்கிய பொற்கலை
சுதந்திரத்தில் மக்களை கவர்ந்திழுத்த போர்க்கலை
பாடல் வசனம் பிறர் செய்தால்
அது திரைப்படம்
அனைத்தும் இவர் செய்தால்
அது நாடகம்
இந்திய நாடு கண்ட முதல் சுகம்
நாடகம் இதுவே சமூக விழிப்புணர்வை
மக்களுக்கு எடுத்துரைத்த நல்ல ஊடகம்
புதுவைக் குமார்
31 யமுனை வீதி வசந்தம் நகர்
புதுவை - 605110 - 9942994112