பொன்மகளே

என் கண்கள் இமைக்க மறுக்கிறது ....
என் இனியவளின் அழகில்

என் கால்கள் நடக்க மறுக்கிறது.....
உன் பூப்பாதம் பதிந்த இடத்தை மிதிக்க

என் செவிகள் கேட்க மறுக்கிறது.......
உன் குயில் வார்த்தையை தவிர

என் கைகள் எழுத மறுக்கிறது..........
என் அழகு தேவதையின் பெயரை தவிர

பொன்மகளே இப்பூமியில் மிதக்கும் தேவதையே.......
என் இதயத்தில் குடிகொண்ட தென்றலை
என் மூச்சில் கலந்த உயிரே
என்னுள் அடக்கி வைப்பேன்
என் இதய கூட்டில்.............

எழுதியவர் : சத்யானந்த் (26-Jul-18, 11:17 am)
சேர்த்தது : சத்யானந்த்
பார்வை : 63

மேலே