திருநெல்வேலி

உயர் திணை பெயர்களுக்கு
மரியாதை வைப்பவர்கள்
இடப்பெயரான ஊருக்கும்
இங்கு மரியாதை...

வெளிச்சத்தில் வாழ்ந்தாலும்
இருட்டு கடையே
இவர்களுக்கு வாழ்வாதாரம்...

கற்பனையை திணிக்கும் கதைகளில்
உண்மையை விளக்கும்
கரிசல் வட்டார எழுத்துக்கள்...

தமிழுக்கு சிறப்பு 'ழ'கரம்
மட்டும் சிறப்பல்ல
'ல' கரமும் சிறப்பென
உலகிற்கு உணர்த்திய
மாண்பு இம்மக்களிடம்...

சைவத்தை வளர்த்தெடுக்கும்
தாமிரமும் சித்திரமும்
இப்புண்ணிய பூமியிலே...

ஆயிரம் தொழிற்சாலைகள்
நாளுக்கு நாள் உருவாக்கினாலும்
விவசாயமே தொழிலாகும்...

மேற்கு தொடர்ச்சியில் உருவாகி
நெல்லைக்கு நல்ல உறவாகி
மகாபாரதமும் போற்றும்
புண்ணிய நதியாய்
ஊரெங்கும் பரவிய தாமிரபரணி...

மனதை மென்மையாக்கி
உடலை தூய்மையாக்கி
உள்ளதை தெளிவாக்கும்
அருவிகளின் கூடாரமே இங்குதான்...

எழுதியவர் : ஆ.சுந்தர் (28-Jul-18, 7:16 pm)
சேர்த்தது : Sundar
Tanglish : thirunelveli
பார்வை : 550

மேலே