நிலா

வட்ட முகத்தழகியே
பால் நிறத்தவளே
நீ அடிக்கடி மேகத்தினுள் மறைவது ஏன்னம்மா
உன்னை ரசிப்பதினால் வெட்கப்பட்டு மறைந்துகொள்கிறாயா
தேய்பிறை நாளில் உன் நெற்றியை மட்டும் காட்டி
என்னை ஏங்க வைக்கிறாய்
நீ வராத அம்மாவாசை நாட்களிலும்
என்னை அமைதியின்றி அலைய வைக்கிறாய்
உன் முழுமதியை காண முப்பொழுதும் காக்க வைக்கிறாய்
காத்திருப்பதில் இருக்கும் சுகத்தை
உன்னிடத்தில்தான் நான் கண்டுகொண்டேன்
வளர்பிறையாய் வளர்ந்து பெளர்ணமியாய் பார்க்கையில்
உனதழகில் நான் மூச்சுற்று நின்றேனடி
ஓவ்வொரு நாளும் உன்னை கண்டால் கண்ணுப்பட்டுவிடும்
என்பதாலோ நீ தேய்ந்து வளர்கிறாய்
எவருக்கும் எட்டாத உயரத்தில் நீ இருந்தாலும்
எட்டி பிடிக்க என் மனம் துடிக்கிறதே
முடியாது என்றாலும் இங்கிருத்துக்கொண்டே
உன்னை கண்டு இன்பமடைந்துகொள்கிறேன்
நீயும் பூமியும் முத்தமிட்டுக்கொள்ளும் நாள்தான்
சந்திரகிரகமென அதிசய நாளானதோ
நானும் பூமியாய் மாறி உன்னிடம் வர வேண்டுமே
அகிலத்தையும் படைத்த ஆண்டவனிடம்
என்னையும் பூமியாய் படைக்க வரம் கேட்கிறேன்
ஆண்டவன் அருளிவிட்டால்
பூமியாய் நானும் நிலவாய் நீயும் முத்தமிட்டுக்கொண்டே
அனைத்து நாளும் அதிசயமாய் வாழ்ந்திருப்போம் !!!

எழுதியவர் : M Chermalatha (31-Jul-18, 7:51 pm)
Tanglish : nila
பார்வை : 277

மேலே