உணர்வு
மலர் மேல் நீ படுத்தால் முதலிரவு
உன் மேல் மலர் படுத்தால் மரண இரவு
கிடைத்தது சுதந்திரம் நள்ளிரவு
கிட்டட்டும் அனைவருக்கும் மனநிறைவு
வாழ்க்கையில் வந்து போகும் பல சரிவு
வாடாமல் இருக்க வேண்டும் நம் அறிவு
மேம்படட்டும் மனிதகுல நல்லுறவு
மேன்மை தழைத்திட நீட்டவேண்டும் ஆதரவு
அனைவருக்கும் வந்து சேரும் முழு ஓய்வு
அதற்க்குமுன் செய்யவேண்டும் நம் ஆய்வு