காட்டிடாயோ

உள்ளத்தி லொன்று வைத்தே
***உதட்டளவி லொன்று பேசிக்
கள்ளமனத் தோடு நாளும்
***காசினியில் உழலு வோரை
எள்ளிநகை யாடு வோரை
***எடுத்தெறிந்து பேசு வோரை
முள்ளாய்நெஞ் சில்தைப் போரை
***முன்னேநீ காட்டி டாயோ ??

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Aug-18, 1:12 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 48

மேலே