Venkatram - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Venkatram
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jul-2018
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  12

என் படைப்புகள்
Venkatram செய்திகள்
Venkatram - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2023 7:09 pm

நல்ல வரன் தா -இறைவா
இதை வரமாக தா

முன்னோர்கள் மகிழ
சான்றோர்கள் வாழ்த்த
ஊருசனம் கொண்டாட
வேண்டும் ஒரு நல்வரன்

வம்சம் தொடர
வாழையடி வாழையாக குலம் வாழ
மழலைகள் மடியில் தவழ்ந்தாட
வேண்டும் ஒரு நல்வரன்

மஞ்சள் குங்குமம் என்றும் நிலைக்க
சொல்லும் பொருளும் போல் இணைந்திருக்க
இல்வாழ்க்கை பயணத்தை இனிதே தொடங்க
வேண்டும் ஒரு நல்வரன்

இதை கொடுப்பதில் உனக்கு ஏன் தயக்கம் ?

கேட்பது என் உரிமை
கொடுப்பது உன் கடமை
பெற்றோரிடம் கேட்காமல் ,
யாரிடம் கேட்பது ?
இறைவா , மனம் இறங்குவாய்
மனையில் மங்கள வாத்தியம் ஒலிக்கச்செய்வாய்

மேலும்

Venkatram - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2023 5:10 pm

தேவை - பாவையின் பார்வை

தைதை என வந்தாள் தையல்
கலகல என அசைத்தாள் வளையல்
துறுதுறு என பார்த்தாள் கயல்
தகதக என மின்னும் சாயல்

திருப்பாவை போய் தைப்பாவை வர
ஆதவன் வடக்கு நோக்கி வர
உள்ளத்தில் அன்பு பொங்கி வர
ஊர்க்கூடி பொங்கல் வைக்க


கழனி செழுமையாய் இருக்க
உழவன் உயர்த்து நிற்க
மாடு நலமாய் இருக்க
பாரதம் பாரில் ஓங்கி நிற்க
பாவையே வரம் தா


பசி பிணி பகை நீங்க
தேச பக்தியும் தெய்வ பக்தியும் வளர
பாரதம் மிளிர
அருள்புரிவாய் தைப்பாவையே
தேவை - பாவையின் பார்வை

மேலும்

Venkatram - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2020 5:32 am

காஞ்சியில் பிறந்து
சென்னையில் தவழ்ந்து
கடலில் கலந்த அடையார் , என் பெயர்

சுதந்திரத்திற்கு முன்னால் சுத்தமாக இருந்த நான்
அதன் பின் அசுத்தமாய் மாறிவிட்டேன்
அது என் பிழையன்று

என் புனிதத்தை கெடுத்தவன் வெள்ளையன் அல்ல இந்தியன்
நதிமுதற்கொண்டு நங்கைவரை கெடுப்பதே தொழிலாக கொண்டுள்ளான் இந்தியன்


இதற்கு தண்டனை இல்லையா ?
நீதியை நிலைநாட்ட வேண்டாமா ?

பாரத தேசமே , இனி நீ பின்பற்ற வேண்டியது அரபு நாட்டுச்சட்டம்
பாலைவன சட்டம் , பாவையரின் பாதுகாப்புக்காக
பாலைவன சட்டம், பாய்ந்தோடும் நதிகளுக்காக
பாலைவன சட்டம், பாவிகளை அழிப்பதற்காக , மன்னிப்பதற்காக அல்ல

தண்டனை கொடுமையானால் , குற

மேலும்

Venkatram - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2020 9:37 pm

கொரோனா

உன்னை பார்க்கமுடியவில்லை
ஆனால் உணரமுடிகிறது
பக்தி வரவில்லை
பயம் வருகிறது

ஒருவிதத்தில் நீ எங்களுக்கு ஆசான்
ஆசாரத்தை போதித்தாய்
பட்டும் படாமல் வாழவைத்தாய்
உண்மையான நட்பை உணரவைத்தாய்

கடல் சூழ் உலகத்தை
கிருமி சூழ் உலகமாக மாற்றினாய்
பொருளாதாரத்தை விழச்செய்தாய்
குபேரனை குசேலனாக்கினாய்
எதற்காக இந்த தண்டனை ?
எங்களை விட்டுவிடு
நீ சென்றுவிடு


நீ மூத்த தேவியைப் போல
செல்லும் பொது அழகாக இருக்கின்றாய்
அதனால் எங்களை விட்டு சென்றுகொண்டே இரு
உன் அழகை ரசிக்கின்றோம்
எங்களிடம் வந்துவிடாதே
ஏனென்றால் , நீ வந்தால்
நாங்கள் சென்றுவிடுவோம்

மேலும்

Venkatram - Venkatram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 3:59 pm

வேதியல் தந்த வேதனை
வேண்டாம் இனி ஒரு சோதனை
மருந்தாக வந்தால் மகிழ்ச்சி
மரணமாக வந்தால் அதிர்ச்சி
நெகிழியை உருவாக்கினான்
இயற்கையை மறந்தான்
செயற்கையை மணந்தான்
நஞ்சையை நஞ்சாக்கினான்
புஞ்சையை புண்ணாக்கினான்
ஆழியை அழித்தான்
மண்டலத்தை மாசுபடுத்தினான்


நெகிழி நெஞ்சை குறிவைத்தது
பிறந்தது ஞானம்
தடைசெய்தான் நெகிழியை

நெகிழியை நிராகரிப்போம்
இயற்கையை நெகிழவைப்போம்
நிறுத்துவோம் நெகிழியின் பயன்பாட்டை
நமக்காக அல்ல புதிய தலைமுறைக்காக

மேலும்

அருமை 03-Aug-2018 6:28 am
மேலும்...
கருத்துகள்

மேலே