அப்துல் காதர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அப்துல் காதர்
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  30-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2018
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  14

என்னைப் பற்றி...

தமிழன்

கவி படிப்பதில் அலாதி விருப்பம்..

என் படைப்புகள்
அப்துல் காதர் செய்திகள்
அப்துல் காதர் - Venkatram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 3:59 pm

வேதியல் தந்த வேதனை
வேண்டாம் இனி ஒரு சோதனை
மருந்தாக வந்தால் மகிழ்ச்சி
மரணமாக வந்தால் அதிர்ச்சி
நெகிழியை உருவாக்கினான்
இயற்கையை மறந்தான்
செயற்கையை மணந்தான்
நஞ்சையை நஞ்சாக்கினான்
புஞ்சையை புண்ணாக்கினான்
ஆழியை அழித்தான்
மண்டலத்தை மாசுபடுத்தினான்


நெகிழி நெஞ்சை குறிவைத்தது
பிறந்தது ஞானம்
தடைசெய்தான் நெகிழியை

நெகிழியை நிராகரிப்போம்
இயற்கையை நெகிழவைப்போம்
நிறுத்துவோம் நெகிழியின் பயன்பாட்டை
நமக்காக அல்ல புதிய தலைமுறைக்காக

மேலும்

அருமை 03-Aug-2018 6:28 am
அப்துல் காதர் - ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2018 1:28 pm

எனது வீட்டில் அம்மா பருப்பு வடை செய்வதற்காக தயாரித்து கொண்டு இருந்தாள்
அருகினில் நானும் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் ..
வடை பருப்புக்கு பதிலாக வேற எதோ ஒரு பருப்பை ஊற வைத்து வைத்து இருந்தது ..
புதுசா எதோ இருக்கு என்று நானு மனசுக்குள்ள நெனைச்சு பேசாம இருந்தேன்

இப்பொழுது எல்லாம் ரெடி வடை சுட ஆரம்பிச்சுட்டாங்க ..
முதல்ல அம்மா சாப்பிட்டு பார்த்தாங்க
என்கிட்டே அம்மா சொன்னாங்க என்னமா எப்பொழுது போல
இல்லாம வித்தியாசமா இருக்குனு

நான் கேட்டேன் , அம்மா வடை பருப்புக்கு பதிலா வேற எதோ இருந்துச்சுனு
இல்ல இந்த பருப்புல வடை நல்லா இருக்கும்னு பக்கத்துக்கு
வீட்டு அக்கா சொல்லுச்

மேலும்

ஹா ஹா ..கண்டிப்பா அனுப்புறேன் நட்பே.. . 30-Mar-2018 10:01 am
இப்படி எல்லாம் வடை சுட்டு இனியாவது கொடுக்காதீங்க. பரவாலே சுட்ட வடையிலே ரெண்டே சுந்தர ட்ராவல் லே கொடுத்து அனுப்புங்க வாங்கிக் கொள்கிறோம். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 9:43 pm
இராக உதய சூரியன் அளித்த படைப்பை (public) ஹுமேரா பர்வீன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Mar-2018 3:32 pm

நினைவின் நிஜமே...!

பன்னீர்
ரோஜா
அழகே...!
பதுமைகள்
போற்றும்
எழிலே...!

பனியின்
குளுமை
சேர்த்து...
பழரசம்
வார்த்த
இதழே...!

பசுமை -
லயத்தில்
இனிய
பதங்கள்
சேர்க்கும்
படைப்பே...!

தளிரின்
இலைசீர்
கரத்தால்
தனியா
இன்பம்
தருந்தேன்
தருவே...!

மௌன
வெளியில்
மணத்தை
மகிழ்வாய்
விதைக்கும்
மொட்டே..!

போதை
தனக்கும்...
போதை
கொடுக்க...
பூத்த
விடியலின்
சொத்தே...!

அழகென
மெல்ல
அசைந்து
அசைந்து
ஆடிடும்
அதிசய
வரவே..!

முள்லென
வெல்லாம்...
நல்லனவாக
சில்லென
சிலிர்த்த
சிற்றிடை
வனமே...!

கனவின்
ஜரிகை
கலந்த..

மேலும்

பதிவிற்கு மிக்க நன்றி ஐய்யா...! 16-Mar-2018 10:33 pm
மிக அருமை...மிக அருமை...நண்பரே...இது குழந்தைக்கா, குமரிக்கா, வயதானவர்க்கா... அனைவருக்கும் அம்சமாக பொருத்தி போகிறது... 16-Mar-2018 4:19 pm
ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Mar-2018 3:50 pm

இன்னும் இருப்பேன்
எதற்குப்பின்பும்...
நடுங்குமுன் உடலில்
நழுவி விழுகிறது
உனது தத்துவம்.
வெடி பொறுக்கி
கும்பலல்ல நான்.
எரிமலை அமிலம்.
துயில் கிழித்து
அலறவிடும் வன்கனவு.
எரிக்குமென் பார்வையில்
உன் கோட்டைச்சாம்பல்
பரிதவித்து திணறும்.
மமதையில் இளிக்கும்
உன் உளறல்கள்
ஒளியில் ஊடுருவும்
என் காலடியில் வரளும்.
பகல் கனவில்
ஊறிய எச்சிலுடன்
அலைவதல்ல என் போக்கு.
முட்டும் பூகம்பம்.
கூச்சலிட்டு தத்தும்
காக்கை கூட்டமல்ல நான்.
தனியே பறக்கும் பருந்து.

மேலும்

உண்மை ஹனிபா...நாம் அதற்கு மெனக்கெட வேண்டிய நேரங்கள் வாழ்நாள் முழுவதும் அல்லவா? மிக்க மகிழ்ச்சி. 17-Mar-2018 7:38 pm
தனித்துவம் தான் வாழ்க்கையை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Mar-2018 7:06 pm
அப்துல் காதர் - கிருத்தி சகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2018 10:48 pm

உதிர்ந்த வார்த்தைகளாய்

சிதறிக்கிடக்கிறேன்

உன் விழிகளின்

வாசிப்பில்

கவிதையாக

காத்திருக்கிறேன்.......

மேலும்

காத்திருப்பும் சுகம்தான் 14-Mar-2018 3:35 am
அப்துல் காதர் - தங்க பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2018 12:30 pm

கடவுளைத் தேடி அலைஞ்சேனே
கால்கடுக்க நான் நடந்தேனே
கரு சுமந்தவ இங்கிருக்க
காசி இராமேஸ்வரம் போனேனே...

அன்னைய மிஞ்சிய தெய்வமில்லடா
அதை மறுத்திடும் யாரும் மனுசன் இல்லடா

பத்து மாசம் சுமந்துன்னை பெத்திடுவா
உன்ன பாத்தவுடனே பட்ட கஷ்டம் மறந்திடுவா
நிறமென்ன இனமென்ன பாக்கமாட்டா
நீ அழுவாய் என்று அவ தூங்கமாட்டா...
தாலாட்டு பாடி உன்ன தூங்க வைப்பா
தவறென்ன செஞ்சாலும் அத தடுக்கமாட்டா
அம்மானு கூப்பிட்டதும் வந்து அனைச்சுடுவா
ஆசைதீர முத்தமழை பொழிஞ்சுடுவா...

தாயைப் போல உறவு உலகில் இல்லையே
அத தைரியமா சொல்லிடுவேன் தயக்கம் இல்லையே...

மேலும்

அருமையான வரிகள் 13-Mar-2018 1:10 pm
நன்றி சகோ... 07-Mar-2018 9:58 pm
நிதர்சனம் நட்பே ..............அவளைவிட இவ்வுலகில் சிறந்தவர்கள் யாருமில்லை ........ 07-Mar-2018 9:33 pm
சையது சேக் அளித்த படைப்பில் (public) Reshma5a13e5e794195 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Mar-2018 5:22 pm

கழு மரத்தில்
கயிற்றை கட்டி,
கழுகுகள் புடை சூழ,
ஒத்தை உயிராய்
உழலுகிறேன்..

என்னை பிரிந்து
தவிக்க வைத்தவளை,
என் உயிரை பிரித்து
தவிர்க்க நினைக்கிறேன்..

அவள் நினைவெனும் ஊஞ்சலிலிருந்து
தவறி விழுந்து,
மரண தொட்டிலில் வயோதிக கிழவனை போல கிடக்கிறேன்..

நான் இறப்பதற்காக கழுகுகளை விட,
நானே பேராசை கொள்கிறேன்....

பிணம் தின்னும் கழுகுகளை விட,
உன் நினைவுகள் என்னை உயிரோடு தின்று பெரும் ஏப்பம் விட்டு செல்கிறது...



.

மேலும்

பிரிவின் தவிப்பு நினைவின் நெருக்கடி இது வாழ்வின் அஸ்தமனமல்ல .. இன்னொரு வாழ்வின் தொடக்கம் விடுங்க பாய்... பீனிக்ஸ் பறவையாய் முகிழ்த்தெழுங்கள் நினைவைத் தந்து உங்களைக் காயப் படுத்தும் அதே மனம் மறதியைக் கொண்டு உங்களுக்கு மருந்தும் இடும் ...காலம் கனியட்டும் புதுப் பாதை புலரட்டும் ...வாழ்த்துக்கள் الشيخ 12-Mar-2018 6:58 pm
என்னை பிரிந்து தவிக்க வைத்தவளை, என் உயிரை பிரித்து தவிர்க்க நினைக்கிறேன்..... 12-Mar-2018 6:31 pm
எண்ணங்கள் யாவும் கனவுகளை போன்றது ஆனால் நினைவுகள் யாவும் எம்மையே சோதிக்கும் துப்பாக்கிச் தோட்டாக்களாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 5:51 pm
அருமையான வரிகள். 12-Mar-2018 5:26 pm
செநா அளித்த படைப்பில் (public) Vaasu Sena மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2018 8:45 pm

தொலைவில் என்னை கண்டதும்
இமைகள் துடிப்பது ஏனோ?
நான் அருகில் வந்ததும்
உதடுகள் நடிப்பது ஏனோ?

இருளாயிருந்த என்வாழ்வில்
நிலவாய் வந்து ஒளிதந்தாய்,
காதல் வானில் தினம் பறந்தோம்
இணைபிரியா பறவையாய்,

பின்பு ஏன் பெண்னே
உன்னிதயத்திலிருந்து என்னை துறந்தாய்,
நீயில்லா என்னிதயத்தில் உயிர் சென்று அழுகிறதே ,
உன்னை நினைத்தே என்வாழ்வும் கடந்து செல்கிறதே,

வானவில்லை போன்று
சிலகணம் பிரகசிக்க வரவில்லை,
வண்ணமில்லா நிழலை போல
உன்னுடன் தொடரவே விரும்புகிறேன்,

காலம் நம்மை பிரித்தாலும்
காதல் சேர்க்கும் என்று நம்பிக்கையில்
நம்காதலுடன் காத்திருக்கிறேன் .............

மேலும்

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நட்பே.... 13-Mar-2018 10:05 am
அருமை சகோ 👌 12-Mar-2018 2:03 pm
ஆமாம் பா.....‌‌‌ தங்களின் கருத்திற்கு நன்றி சகோதரி.... 28-Feb-2018 7:21 am
என்னபண்றது ...நம்பிக்கைதானே வாழ்க்கைனு ஓட்டவேண்டியதா ....... 27-Feb-2018 11:55 pm
அப்துல் காதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2018 4:25 am

சீரிய பூமி சிரியா இன்று
சீர் குலைந்து நிற்கிறதே!

வாணிபம் ஓங்கிய ஷாமில் என்றும் வான்மழை குண்டாய் பொழிகிறதே!

பச்சிளம் மழலைகள் தேகம் எங்கும் குறுதிக் குளமாய் ஆகிறதே!

பட்டினி பசியும் மட்டுமே இவர்கள் உடன் சேர்ந்தே வருகிறதே!!

ஐ.நா என்றொரு அயோக்கிய (சபை) முதலை கண்ணீர் வடிக்கறதே!

ஐயோ பாவம்! கேட்க கூட நாதி அற்று கிடக்கிறதே!!!

தன் ஊன் உருக்கி ஊட்டிய பிஞ்சுகள்
தன்முன் கருகி கிடக்கிறதே!

காக்கை குருவியின் ஒற்றுமை கூட
காக்க தவறி விட்டனரே

தன்னலம் மட்டுமே தாரக மந்திரம் என்றொரு அர(க்க)சியல் நடக்கிறதே!!! 🤐

மேலும்

மறுக்க முடியாத மெய்... 11-Mar-2018 3:25 pm
உண்மை சகோதரரே ! 11-Mar-2018 3:24 pm
ஐநா வின் உருவாக்கமே இஸ்ரேல் எனும் நாட்டை உருவாகத்தான் என்பதை யாருமே மறந்து விடக் கூடாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Mar-2018 1:46 pm
வல்லாதிக்கங்களின் கோரப்பிடி வேர்விடத் தொடங்கியிருக்கிறது. ஈழம், லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான், மியான்மர் இன்னும் பட்டியல் நீளும்... இப்பொழுதே விழித்துக்கொண்டால் நல்லது இல்லையேள் நாளை???? 11-Mar-2018 6:51 am
அப்துல் காதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2018 10:32 pm

கடல் அலையும் துள்ளி வரும் உன்,
உடல் அழகை கண்டுவர !

கார்மேகம் கூடிநிற்க்கும் உன்
கார்கூந்தல் கோதி விட!!

தேன் உண்டு மயங்கிய வண்டு உன் தேகம் கண்டு, வியந்தேன் இன்று!!!

நாவொன்று போதாது உன் நனிச்சிறப்பை கூறிடவே!!!!

மேலும்

Super :) 11-Mar-2018 11:41 pm
நன்றி அன்பரே ! உண்மை 11-Mar-2018 5:34 pm
நன்றி அன்பரே... 11-Mar-2018 5:33 pm
அவளைக் காணும் வரை பித்தனாக இருந்த நான் அவளைக் கண்ட பின் ஞானியாகி விட்டேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Mar-2018 1:23 pm
அப்துல் காதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 11:22 pm

நான்காம் விரலாய் ஒரு பன்மொழி பாவலன்!

விமர்சன கூர் ஆயுதம் என்றாலும், இவன் விகடகவியும் தான்...

மேலும்

மூன்று விரல்களால் பற்றி கொன்று நான்காம் விரலாய் (எழுதுகோல்) பதியும் எழுத்துக்கள்... 10-Mar-2018 8:54 am
நான்காம் விரல் அர்த்தம் தர முடியுமா.... 10-Mar-2018 8:35 am
பதினோராம் விரல் தான் எழுதுகோல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 1:49 am
அப்துல் காதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 3:34 am

ஈன்றெடுத்த என் அன்னை எங்கே?
தோல்கொடுத்த என் தந்தை
எங்கே?
நான் காண்பது என்ன கனவோ இல்லை என் காட்சி பிழையோ !

எங்கே செல்வேன், யாரிடம் சொல்வேன்??

தூக்கம் தொலைத்த என் விழிகள், துக்கம் மட்டுமே என் வலிகள்.

எங்கும் கேட்கும் மரண ஓலம் எங்கள்
சிரிய வீதியில் எந்த நாளும்.

மேலும்

அல்லாஹ் யாவும் அறிந்தவன் விரைவில் உண்டு அவர்களுக்கு !! ஜசாக்கல்லாஹ் 09-Mar-2018 8:44 pm
நேர்மை தவறிய நெறி கெட்ட பூமியில் அரக்கர்கள் எண்ணிக்கை தொகையாக பரவி விட்டது இனி மரணங்கள் கூட மலிவாகி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 8:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

user photo

Maxin

Kurumbur, tuticorin
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
நாஞ்சில் வனஜா

நாஞ்சில் வனஜா

நாஞ்சில்

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே