நம்காதலுடன்

தொலைவில் என்னை கண்டதும்
இமைகள் துடிப்பது ஏனோ?
நான் அருகில் வந்ததும்
உதடுகள் நடிப்பது ஏனோ?

இருளாயிருந்த என்வாழ்வில்
நிலவாய் வந்து ஒளிதந்தாய்,
காதல் வானில் தினம் பறந்தோம்
இணைபிரியா பறவையாய்,

பின்பு ஏன் பெண்னே
உன்னிதயத்திலிருந்து என்னை துறந்தாய்,
நீயில்லா என்னிதயத்தில் உயிர் சென்று அழுகிறதே ,
உன்னை நினைத்தே என்வாழ்வும் கடந்து செல்கிறதே,

வானவில்லை போன்று
சிலகணம் பிரகசிக்க வரவில்லை,
வண்ணமில்லா நிழலை போல
உன்னுடன் தொடரவே விரும்புகிறேன்,

காலம் நம்மை பிரித்தாலும்
காதல் சேர்க்கும் என்று நம்பிக்கையில்
நம்காதலுடன் காத்திருக்கிறேன் .............

எழுதியவர் : புதுகை செநா (27-Feb-18, 8:45 pm)
பார்வை : 140

மேலே