நம்பிக்கை ஒரு சாகும் உண்மை
பசித்த வயிற்றுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன பற்பல
தாவரம்
ஒன்று ஆல். ஒன்று அரசு
ஒன்று வேம்பு…
அவனுக்கு வேண்டிய
ஒன்றோ
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது....
இதை எழுதிய
ஞானக்கூத்தன் இன்றில்லை
என்றாலும் கூட
அரிக்கிறது உள்ளங்கால் விடாது
அவர் பார்த்த நாற்றங்கால்
நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு.