நாம் இருவரே இறுதிவரை

ஆசையோடு வளர்த்தவர் எல்லாம்
ஆதரவும் காட்டவில்லை !

பாசத்தைக் கொட்டியும் பலனில்லை
வீதியில் நான் இன்று !

ஒட்டி உறவாடிய உறவுகளும்
ஒதுக்கிவிட்டனர் நேசமின்றி !

ஆறறிவு உள்ளோர் வரவில்லை
ஆறுதல் கூறிடவும் அருகில் !

ஐந்தறிவு படைத்த நீயன்றோ
நெருங்கி வந்தாய் என்னிடம் !

கைவிட்டதால் கலங்கினேன் உன்
கைப்பட்டதால் மகிழ்கிறேன் நான் !

நான் ஒருத்தியல்ல இன்றுமுதல்
நாம் இருவரே இறுதிவரை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Aug-18, 7:11 am)
பார்வை : 374

மேலே