இரவோடும் பகலோடும் யுத்தம்

சொல்லாத சோகமெல்லாம்...
உசுருக்குள்ள ஊடுருவ....!!!

இரவோடு யுத்தம் செஞ்சி
தூக்கத்தை சிறை பிடிச்சேன்....!!

இமைகள் மூடி இருக்க.......
மனச மட்டும் சிறை பிடிக்க மறந்தேனே...!!!

நினைவுகளெல்லாம் ரணமாக்குது மனச...
ஒரு வழியா....
மனச மூடி
தூக்கத்தை தேடி....
கண்மூடி தூங்கையில .....!!

அடுத்த போருக்கு வாள்
புடிச்சி காத்து நிக்கிறான் ஆதவன்....
அவனோட யுத்தம் செய்ய வாள் பிடிச்சி
நிற்கையில்...!!
உதிரம் ஏதும் இல்லாம அவனோட கதிர்வாள்
என்மனச...
குத்தி கிழிக்குதே....!!
....................எண்ணற்ற கேள்விகளோடு.....................
பதில் சொல்ல தெம்பு இல்ல......
விடை தெரிஞ்சும் சொல்ல முடில...
சோகத்தை சொல்லி அழ
துணையா யாரும் இல்ல...
முறையிட கோவிலுக்கு போனா...
சாமி கூட கற்சிலை... ......
உறவுகள் இருந்தும்....
எனக்குன்னு யாரும் இல்லையே...
தினமும் இரவோடும்....
பகலோடும்....
யுத்தம் மட்டும் நடக்குது....
வெற்றி வாகை இன்னும் சூடலியே....!!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (4-Aug-18, 12:56 pm)
பார்வை : 180

மேலே