ஏக்கம்
என்னவனே...!
ஏக்கம் தான்...!
என்னுள் எழும் சில மனக்குறைகள் தீரக் கூட தேவையில்லை...!
தோள்களில் சாய்ந்து கொண்டு, தலை வருடியபடி கேட்க ஒரு உறவிருந்தால் போதும்...!
அதுவும் நீயாக இருந்தால் மட்டும் போதும்...!
காதலனாக அல்ல...!
கணவனாக அல்ல...!
தோழனாக...!!