வள்ளுவருடன் கைகோர்த்து

கற்கக் கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகஎன்ற றிந்துநில்
பிற்காலத் தில்நீ உயர் !

--குறட்பா ஒருவிகற்ப சிந்தியல் வெண்பாவாக

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்காத லால்நீயும்
எண்ணித் துணிபின் இயங்கு !

--- குறட்பா ஒருவிகற்ப சிந்தியல் வெண்பாவாக

வழுத்தினள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினேன் என்றுசொல்யா ரந்தப்
பழிகாரி சொல்என் றனள் !

----குறட்பா பலவிகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பாவாக
இவைகளை அளவடிகளிலும் சொல்லமுடியும் .

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-18, 10:21 am)
பார்வை : 80

மேலே