கடைசி விருப்பம்


தூக்கு தண்டனை
கைதியின்
கடைசி விருப்பம்

கவிதை வேண்டும்

உன் உயிர் பிரியும் போது
கவிதையில் மலரும்
உனக்கு இறப்பில்லை
வாழ்வாய்
வாழ்த்தினான் கவிஞன்

கைதியின் முகத்தில்
புன்னகை
கண்களில் நீர்

கயிறு இறுகியது
உயிர் பிரிந்தது
வாழ்கிறான்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-11, 4:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kadasi viruppam
பார்வை : 347

மேலே