மகா ஆத்மா

சுதந்திர சுவாசக்காற்றுக்காக
செங்கொடி தூக்கிய சங்கம சூழலில்

செந்நிற கறைகள்
இந்திய மண்ணில் இலவச சின்னமாய்

வந்தேறி கூட்டம் வண்மம் கொண்டு
திண்மக்கரங்களின் குரல்வளை நெரித்தும்

என்குலப்பெண்களின் சங்கிலியறுத்து
குங்குமம் கலைத்து சந்ததி அழித்தும்

மயிலிறகு பிடித்து விளையாடிய -என்
மழலையர் மாண்டதும்

இத்துணை நடந்தும் சத்தியமே என் வழி
வன்முறை நன்முறைஅல்ல என

அகிம்சை எனும் ஒற்றை அகலக்குழிக்குள்
அந்நியரை அஸ்தமனம் செய்த
நீ உண்மையில் மகா ஆத்மாதான்

எழுதியவர் : இளவல் (16-Aug-18, 2:31 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : maga athmaa
பார்வை : 3401

மேலே