விழி நீர்

பெண்ணே
பாதை மாறிய பயணம்
ஊர் வந்து சேராது என்பது
உன்னளவில் பொய்தானடி

என் உயிரான காதல் பாதையில் இருந்து மாறி
நீ பயணம் செய்து
உன் கல்யாண ஊரை
வந்துதானே அடைந்திருக்கிறாய்...

நான்தான் ஏமாற்றத்தில்
விழி நீர் பெருகி
வழி தெரியாமல் நிற்கிறேன்

எழுதியவர் : சாந்தி ராஜி (16-Aug-18, 9:18 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : vayili neer
பார்வை : 1067

மேலே