கேரளம் மலரட்டும்
மழை வேண்டி நின்ற காலம்
நாம் கண்டதுண்டு .
காலத்தின் முன்னேற்றம்
மாறிய வானிலை.
உலகின் ஒரு முனையில் மழையும்
மறு முனையில் நீரிலே உலகம் .
நீரில்லாமல் தவிக்கும் தமிழகம்
நீரில் தவிக்கும் கேரளம் .
கரம் நீட்ட வழி இன்றி வேண்டி
கொள்பவரும் உண்டு .
பணத்தோடு உயிர் வளர்க்கும்
முதலைகளும் உண்டு .
மலையாள கரை காணாமல்
வெளிஏறும் மக்கள் .
தண்ணீரை காண அவர்கள்
கண்ணீர் அதில் கலந்தது
தூக்கம் மறந்து படகுகள்
பயணிக்கும் வீரர்கள் .
அவர்கள் தோள் கொடுக்க
நாம் கரம் கோர்ப்போம் .
கேரளம் மலரட்டும்.
உங்கள்
உமா நிலா