கேரளம் மலரட்டும்

மழை வேண்டி நின்ற காலம்
நாம் கண்டதுண்டு .

காலத்தின் முன்னேற்றம்
மாறிய வானிலை.

உலகின் ஒரு முனையில் மழையும்
மறு முனையில் நீரிலே உலகம் .

நீரில்லாமல் தவிக்கும் தமிழகம்
நீரில் தவிக்கும் கேரளம் .

கரம் நீட்ட வழி இன்றி வேண்டி
கொள்பவரும் உண்டு .

பணத்தோடு உயிர் வளர்க்கும்
முதலைகளும் உண்டு .

மலையாள கரை காணாமல்
வெளிஏறும் மக்கள் .

தண்ணீரை காண அவர்கள்
கண்ணீர் அதில் கலந்தது

தூக்கம் மறந்து படகுகள்
பயணிக்கும் வீரர்கள் .

அவர்கள் தோள் கொடுக்க
நாம் கரம் கோர்ப்போம் .

கேரளம் மலரட்டும்.

உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (18-Aug-18, 9:46 pm)
சேர்த்தது : uma nila
பார்வை : 130

மேலே