என் உயிரே நீ பிரிந்தால் -
கண்ணீரில் கரையாத
காயங்கள் நீ தந்தாய்
செந்நீரும் செவி கொண்டால்
விழிகள் வழி வழிந்தோடும்
என்னுயிரும் புவி நின்றால்
உன் நினைவே கவியாகும்....
செம்மீனே, நீ பிரிந்தால்
என்னுடலாழி வற்றிவிடும்
விண்மீனே, நீ பிரிந்தால்
இருள்ளென்னை சுற்றிவிடும்
என்னவளே, நீ பிரிந்தால்
என் சீவன் எனைப்பிரியும்
என்னுடலை புழுவுண்டால்
என் மனதை அதுவறியும்
காயங்கள் கொண்டன்பே
கண்ணீரில் தினமுறையும்...
தினம்,
உன் நினைவுண்ண
நானிருந்தால்
உயிரோடும் கல்லாவேன்
உன் காதல் சொல்லாகும்
என் வாழ்வும் முள்ளாகும்.....
--கண்ணீரில் கல்லறை