அண்ணியென்ற மூன்றெழுத்தில்

பெண்ணின் பெருமை தேடித் தருபவள் அண்ணி
அண்ணியின் வரவால்,
அண்ணண் வீடு சொர்க்கமாகும்
அண்ணனின் பாசம் இரட்டிப்பாகும்
அண்ணிக்கு அன்பும் மதிப்பும் தானாய் சேரும்

அண்ணி என்றால் அம்மாதான்
குடும்பத்தின் குத்து விளக்காம் அண்ணியின்
சொல்லோ செயலோ
குடும்பத்தில் உள்ள அனைவரையும்
அன்பினால் ஆடசி கொள்ளும் .
உண்மை அன்பு எங்கே /அங்கே குடும்பம் முழுதும் சங்கமம்
.
அவள் கீறினால் தாண்டமுடியாத பாச வலையில் குடும்பம்
சொத்துக்களை தேட முடிந்த இவ்வுலகில்
சொர்க்கத்தையும் காண முடியும் என்றால்
அது அண்ணி என்ற உறவில் மட்டுமே
அத்தகைய புனிதமான உறவு குடும்பங்களில்
அமைந்து விட கொடுத்து வைத்தவர்கள் நாம்

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அவளை நேசித்தால்
குடும்பத்தை அவள் பூசிப்பாள் சேவிப்பாள்
அன்பு அண்ணி அமைந்தால் அழகிய குடும்பம் ஓன்று உருவாகிறது
அக்குடும்பத்தின் தாய் அன்பான அண்ணியே .
அண்ணி என்ற மூன்றெழுத்தில் அம்மா... என்ற சொல்லிருக்கு
இது ஒரு தொடர் கதையே .

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Aug-18, 11:21 am)
பார்வை : 4328

மேலே